இன்று முதல் சென்னையில் அமல் - வாகன ஓட்டிகளே உஷாரா - மாத்திடுங்க ரூ. 1500 வரை ஃபைன்... அதிரடி செக்

Update: 2024-05-02 08:26 GMT

சென்னையில் வாகன நம்பர் பிளேட்டுகளில், ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக இன்று போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி செல்லும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். அதன்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பாக செல்லக்கூடிய வாகனங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து அபராதம் விதித்தனர். முதல் முறை 500 ரூபாய் அபாராதமும், அடுத்த முறையும் ஸ்டிக்கரை எடுக்காமல் இருந்தால் 1,500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்