தந்தை வயதான நபருடன் தகாத உறவு.. அப்பாவுக்கு சரக்கு ஊத்தி கொடுத்த பின் செய்த கேவலமான செயல்

Update: 2024-05-02 09:19 GMT

பூதப்பாண்டி அருகே கடுக்கரை கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்த நிலையில், தனது 2வது மகளான ஆர்த்தியுடன் வசித்து வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான சுரேஷ்குமார், கடந்த 26ம் தேதி வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில், அடுத்த நாள் காலையில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. தகவலின் பேரில் வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில், சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் சுரேஷ்குமார் கழுத்து நெறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்ததை அடுத்து, மகள் ஆர்த்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மகளே தந்தையை திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது.

தூரத்து உறவினரும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான சுரேஷ் பாபு என்பவர், 4 ஆண்டுகளாக ஆர்த்தியுடன் தகாத முறையில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. தந்தை வயதை ஒட்டியுள்ள சுரேஷ்பாபுவுடன் ஆர்த்தி எல்லை மீறிய பழகி வருவது, அரசல் புரசலாக சுரேஷ் குமாருக்கு தெரியவர, அவர் மகளை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி, சுரேஷ் பாபுவுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று இருவரும் சேர்ந்து சுரேஷ் குமாருக்கு அளவுக்கு மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். இதில் சுயநினைவின்றி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ்குமாரை, ஆர்த்தியும், சுரேஷூம் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க, அதிக மதுபோதையில் தந்தை உயிரிழந்ததாக ஆர்த்தி நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. அதனைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்