ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரம்,டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கில், நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2019-10-14 20:54 GMT
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க, கடந்த வாரம் அமலாக்கத்துறை,  டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார் குகர் சிதம்பரத்தை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து ப.சிதம்பரம்  டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து, நாளை மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்