ரயிலில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி : பள்ளி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ரயிலில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில், 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, குடிநீர் சிக்கனம் குறித்த ஓவியங்களை வரைந்தனர்.

Update: 2019-10-06 16:27 GMT
ரயிலில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டியில், 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு, குடிநீர் சிக்கனம் குறித்த ஓவியங்களை வரைந்தனர்.  மகாத்மா காந்தியின் 150-வது  பிறந்தநாளையொட்டி, புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வரை சென்ற ரயிலில், இந்த போட்டி நடத்தப்பட்டது. புதுவை மாநில ஓவியர் மன்றம் சார்பில்   நடத்தப்பட்ட போட்டியில், கடலூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு   சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்