உரிய விசா இன்றி மலேசியா சென்ற பாக்கியராஜ் கைது - இந்திய தூதரக உதவியுடன் விடுதலை

புதுச்சேரி திருபுவனையைச் சேர்ந்த பாக்கியராஜ் உரிய விசா இன்றி மலேசியா சென்றதால் அங்கு கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-18 05:54 GMT
புதுச்சேரி,  திருபுவனையைச் சேர்ந்த பாக்கியராஜ் உரிய விசா இன்றி மலேசியா சென்றதால், அங்கு கைது செய்யப்பட்டார். பாக்கியராஜின் மனைவி அருணா விடுத்த வேண்டுகோளை ஏற்று, அவரை இந்தியா கொண்டுவர புதுவை அரசு முயற்சி மேற்கொண்டது.இதனையடுத்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் பாக்கியராஜ் விடுதலை செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து புதுவை வந்த பாக்கியராஜ் தனது குடும்பத்தினருடன் சென்று முதலமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்