ஆவணி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார்.

Update: 2019-08-18 03:35 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைக்காக, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து தந்திரி மகேஷ் மோகனாரு பக்தர்களுக்கு விபூதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தியாக சுதிர் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தி பதவிக்கு பரமேஸ்வரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முகத்தேர்வு நடத்தி தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பெயர்களையும் வெள்ளி குடத்தில் போட்டு குலுக்கல் முறையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் மேல்சாந்தியாக இருப்பார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்