ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தினம் : நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2019-04-13 06:23 GMT
ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 100வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல் இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் சர் டோமினிக்கும் ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததை குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்