தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ : கரும்புகையுடன் தீ பரவியதால் பரபரப்பு
தெர்மாகோல் தொழிற்சாலையில் திடீரென பற்றி எரிந்த தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அடுத்த கஷ்னாவில் உள்ள தெர்மாகோல் தொழிற்சாலையில் திடீரென பற்றி எரிந்த தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உள்ளிருந்த மூலப்பொருட்கள் உள்ளிட்டவை மளமளவென பரவிய தீயில் நாசமானது. தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழப்பு, பொருட்சேதம் குறித்த தகவல்கள் தெரியவில்லை.