'பத்ம விருதுகளை பெயருடன் இணைத்துப் பயன்படுத்த கூடாது' - மத்திய அரசு
'பத்ம விருதுகளை பெயருடன் இணைத்துப் பயன்படுத்த கூடாது' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில், உள் துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தேசிய விருதுகள் அரசியல் சாசன விதியின்படி விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ விருதுகளின் பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும் அப்படி தவறாக பயன்படுத்தினால் விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.