தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் "Go Back Modi"

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆந்திர மாநிலம் வர உள்ள நிலையில் கன்னவரம் விமான நிலையத்திலிருந்து விஜயவாடா வரை அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2019-02-09 14:05 GMT
தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டு உள்ள பதாகைகளை, வைத்தது யார் என்று தெரியாத நிலையில் அவற்றை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக ஆந்திராவின் பல்வேறு இடங்களில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி  மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஊர்வலங்களை நடத்தி வருகின்றன
Tags:    

மேலும் செய்திகள்