வெளியான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் | andhra pradesh | elections 2024

Update: 2024-04-30 08:58 GMT

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு மே 15ந் தேதி நடைபெறும் தேர்தலையொட்டி, இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தில் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சட்டமன்றத் தொகுதிக்கு 2 ஆயிரத்து 705 பேரும், நாடாளுமன்ற தொகுதிக்கு 503 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் மே 15ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளில் 25 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்குதல் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கியது. வேட்பு மனு வாபஸ் பெற நேற்று கடைசி நாள். இதனை அடுத்து இன்று இறுதி கட்ட பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்