சபரிமலை : அனைத்து புதிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை செல்வதற்கான பெண்களின் விரதத்தை 21 நாட்களாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எம்.கே. நாராயணன் போற்றி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Update: 2018-11-08 07:09 GMT
சபரிமலை செல்வதற்கான பெண்களின் விரதத்தை 21 நாட்களாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எம்.கே. நாராயணன் போற்றி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதே போல் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டாயம் அமல்படுத்த வேண்டாம் என மும்பையை சேர்ந்த ஷைலஜா உட்பட 8 பேர் கேரளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம்,  உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மறுசீராய்வு மனுவின் தீர்ப்பு வரும் வரை உச்சநீதிமன்றம் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது.
Tags:    

மேலும் செய்திகள்