முதலமைச்சரை இழிவு படுத்தியதாக குற்றச்சாட்டு தேவசம்போர்டு ஊழியர் பணியிடை நீக்கம்
சபரிமலை விவகாரத்தால் ஆத்திரம் அடைந்த தேவசம்போர்டு ஊழியரான விஷ்ணு, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் புகைப்படங்களில் மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்
சபரிமலை விவகாரத்தால் ஆத்திரம் அடைந்த தேவசம்போர்டு ஊழியரான விஷ்ணு, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன், அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் ஆகியோர் புகைப்படங்களில் மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து விஷ்ணுவை தேவசம்போர்டு பணியிடை நீக்கம் செய்துள்ளது.
உயிர் தியாகம் செய்வதாக கூறியவர் கைது
அதேபோல் சர்வதேச இந்து பர்ஷத் அமைப்பை சேர்ந்த ஸ்ரீராஜ் கைமள் என்பவர் ஐயப்பசுவாமிக்காவும், இந்து மதத்திற்காவும் கொச்சி உயர்நீதிமன்ற சந்திப்பில் உயிர் தியாகம் செய்யவுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அப்பகுதியில் முகாமிட்டு இருந்த போலீசார், கொச்சி உயர்நீதிமன்ற சந்திப்பிற்கு வந்த ஸ்ரீராஜ் கைமளை கைது செய்தனர்