"சமூக வலை தளங்களில் உள்ள சசிகலா புஷ்பாவின் புகைப்படங்களை நீக்க வேண்டும்" - டெல்லி உயர் நீதிமன்றம்

FACEBOOK,GOOGLE போன்ற சமூக வலை தளங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த தரக்குறைவான பதிவுகளையும் புகைப்படங்களையும் நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-18 07:07 GMT
FACEBOOK, GOOGLE போன்ற சமூக வலை தளங்களில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த தரக்குறைவான பதிவுகளையும் புகைப்படங்களையும் நீக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இது தொடர்பாக சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில்,  தனது புகைப்படங்களை சிலர் morphing செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதாகவும், அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி யோகேஷ் கண்ணா, சசிகலா புஷ்பா குறித்த அவதூறுகளையும், புகைப்படங்களையும் நிரந்தரமாக நீக்குமாறு பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்