"தனியாக மீண்டுவர நேரம் அளியுங்கள்" - நடிகை சமந்தா வேண்டுகோள்

நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து பரவும் வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Update: 2021-10-09 06:54 GMT
சமந்தா - நாக சைதன்யா இணை விவாகரத்து பெற்று பிரிந்து வாழப்போவதாக  கடந்த வாரம் அறிவித்தனர். இதனையடுத்து சமந்தா குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகை சமந்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மீது ரசிகர்கள் காட்டும் அக்கறை தன்னை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாகவும், தனக்கு எதிராக பரவும் வதந்திகளில் இருந்து தன்னை பாதுகாத்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார். விவாகரத்தையொட்டி, தான் இன்னொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன என்றும், 
இத்தகைய தாக்குதல்களால் தான் உடைந்து விட மாட்டேன் எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் விவாகரத்து வலி மிகுந்தது என குறிப்பிட்டுள்ள சமந்தா, அதிலிருந்து மீண்டு வர நேரம் அளிக்குமாறு  வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்