இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணத்திற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்

இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணத்திற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்

Update: 2021-04-30 04:48 GMT
இயக்குநர் கே.வி. ஆனந்த் மரணத்திற்கு திரைப் பிரபலங்கள் இரங்கல்

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்தின் மறைவுக்கு, கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் இரங்கற்பா வெளியிட்டுள்ள அவர், கே.வி. ஆனந்த் தனது பாடல்களை ரத்தினமாய் மாற்றியதாகவும், திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கியதாகவும் கூறி உள்ளார். ஒளியாய் கே.வி. ஆனந்த் வாழ்வார் என்றும் வைரமுத்து தனது இரங்கற்பாவில் குறிப்பிட்டு உள்ளார்.

பிரபல இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கே.வி. ஆனந்தின் மறைவுச் செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், மிகவும் திறமையான மனிதரை திரைத்துறை இழந்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். 

இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகை குஷ்பு இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கே.வி. ஆனந்தின் மறைவை நம்பவே முடியவில்லை என்றும், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் கூறி உள்ளார். 

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மாரடைப்பால் மரணம் அடைந்த நிலையில், அவரது மறைவுக்கு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், கே.வி. ஆனந்த் உயிரிழந்ததை நம்பவே முடியவில்லை என்றும், அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் கூறி உள்ளார். 

இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவுக்கு நடிகர் கவுதம் கார்த்திக் இரங்கல் கூறி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மிகச்சிறந்த இயக்குநரை இழந்து உள்ளதாகவும், கே.வி. ஆனந்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்