எஸ்.பி.பி.-க்கு அஞ்சலி செலுத்த திரண்ட தமிழ் திரையுலகம்- இரங்கல் கூட்டத்தில் நினைவலைகளை பகிர்ந்த பிரபலங்கள்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-10-01 03:39 GMT
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபி க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னையில் தமிழ் திரையுலகம் சார்பில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் எஸ்பிபி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. எஸ்பிபி-இன் சாதனைகளை அசைபோடும் வகையில் காட்சித்தொகுப்பும் ஒளிபரபப்பட்டது.நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி இயக்குனர்கள் வெற்றிமாறன், பி.வாசு, பின்னணி பாடகர் மனோ, பாடகி சித்ரா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு எஸ்.பி.பி. உடனான தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எஸ்.பி.பி. பெயர் அல்ல உணர்வு என்று நடிகர் பார்த்திபனின் உருக்கமான கவிதை இடம்பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்