பிகில் காப்புரிமை வழக்கு, உயர் நீதிமன்றம் அனுமதி - கதைக்கு காப்புரிமை கோருகிறார், இயக்குநர் செல்வா

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2019-10-22 11:26 GMT
பிகில் படம் 25ம் தேதி வெளியாகும் நிலையில்,  அந்த படத்துக்கு தடை கோரியும், கதை தனக்கு சொந்தமானது எனவும் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். பின்னர், காப்புரிமை விவகாரம் என்பதால் அந்த வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில், காப்புரிமை மீறல் தொடர்பாக  மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர, இயக்குநர் செல்வாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளர். மனுதாரர் செல்வா தாக்கல் செய்யும் வழக்கை சட்டப்படி விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவும் உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்