சிசிடிவி கேமராக்களை வழங்கிய 'வாட்ச்மேன்' படக்குழு

பொள்ளாச்சியில் குற்றங்களை தடுக்கும் விதமாக ஜி.வி. பிரகாஷின் 'வாட்ச் மேன்' பட குழு சிசிடிவி கேமரா வழங்கியுள்ளது.

Update: 2019-04-11 10:16 GMT
பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில், மனிதனுக்கு பாதுகாப்பு வழங்கும் நாய் குறித்து வாட்ச்மேன் படம் எடுக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போல் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 50 சிசிடிவி கேமராக்களை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், வழங்கியுள்ளார். நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் அந்த கேமராக்கள் பொருத்தப்பட்டன.  தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் குற்றங்களை தடுக்கும் விதமாக, வசதி படைத்தவர்கள் சிசிடிவி கேமராக்களை வழங்க வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்