சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் உள்ள அ.தாழையூர் கிராமத்தில், மக்கள் அமைத்த ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்திய பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் : தண்ணீருக்காக மக்களே போட்ட ஆழ்துளைக்கிணறு - பாமக நிர்வாகி தகராறு - மக்கள் ஆர்ப்பாட்டம்
x
சேலத்தில் உள்ள அ.தாழையூர் கிராமத்தில், மக்கள் அமைத்த ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்திய பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணறு வறண்டு போனதால், இரு தரப்பினர் ஒன்றிணைந்து, நகராட்சியிடம் அனுமதி பெற்று புதிதாக ஆழ்துணை கிணறு தோண்டியுள்ளனர். இந்நிலையில் பாமக நிர்வாகிகள் சீரங்கன், மாதையன், பெருமாள் ஆகியோர் தங்களை கேட்காமல் கிணறு தோண்டியதாக கூறி, அடியாட்களுடன் வந்து கிணற்றை சேதப்படுத்தி, மிரட்டியுள்ளனர். இந்நிலையில் போலீசார் அவர்களை விசாரிக்காமலேயே அனுப்பி வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்