வாக்கு எண்ணிக்கை தொடர்பான முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு

மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
வாக்கு எண்ணிக்கை தொடர்பான முறையீட்டை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு
x
மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச்சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்தால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற முறையீட்டை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னையை சேர்ந்த லட்சுமிகிருபா என்பவர் சார்பில் அவரது வழக்கறிஞர், இந்த கோரிக்கையை முன்வைத்தார். விடுமுறை காலத்தின் முதல் இரண்டு அமர்வை அணுகாமல் கடைசி நேரத்தில், நீதிமன்றத்தை நாடியிருப்பதாகக் கூறி மனுதாரரின் முறையீட்டை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்