அ.தி.மு.க., அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் : செருப்பை தூக்கி அ.தி.மு.க.வினர் காட்டியதால் பரபரப்பு

அரவக்குறிச்சியில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
அ.தி.மு.க., அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் : செருப்பை தூக்கி அ.தி.மு.க.வினர் காட்டியதால் பரபரப்பு
x
அரவக்குறிச்சியில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க. தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில் நாதனுக்கு வாக்குக் கேட்டு மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அ.ம.மு.க. வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்ற பகுதி என்று கூறி, அ.ம.மு.க. வேட்பாளர் மற்றும் அக்கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். காவல்துறையைக் கண்டித்து அ.ம.மு.க. வேட்பாளர் சாகுல் ஹமீது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது, அ.தி.மு.க.வினர் செருப்பை தூக்கி காட்டியதால் பதற்றம் உருவானது. இருதரப்பினர் இடையே கடுமையான வாக்கு வாதமும், மோதல் எழும் சூழ்நிலையும் உருவானது. இறுதியாக, மோதலைத் தவிர்க்கும் வகையில் அ.ம.மு.க.வினர் மாற்று வழியில் திரும்பிச் சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்