கணவரின் சிகிச்சைக்கு உதவி கோரிய பெண் : தேவையான உதவி செய்யப்படும் என தமிழிசை வாக்குறுதி
தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தின் போது, வாக்காளர் ஒருவர் தனது கணவர் ரவிசந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தின் போது, வாக்காளர் ஒருவர் தனது கணவர் ரவிசந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் கணவர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல் கூறினார். மருத்துவர்களிடம் ரவிச்சந்திரன் பெற்றுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த தமிழிசை, மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
Next Story