இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது சென்னையில் திருவையாறு

மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு சென்னையில் நடக்கும் நிகழ்வான சென்னையில் திருவையாறு வரும் 18ஆம் தேதி இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது.
இசை நிகழ்ச்சியோடு தொடங்குகிறது சென்னையில் திருவையாறு
x
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த குழுவினர், 14வது ஆண்டை எட்டிய இந்த நிகழ்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைப்பதாக தெரிவித்தனர். மேலும் கர்நாடக சங்கீதம் மற்றும் நாட்டிய கலைஞர் ஒருவரின் கலை உலக வாழ்நாள் சேவையை பாராட்டும் விதமாக இசை ஆழ்வார் என்ற விருதும் வழங்கப்பட உள்ளதாகவும் அவர்கள் கூறினர். எம்.எஸ்.விஸ்வநாதனை கவுரவிக்கும் வகையில் சிலை திறக்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்வு டிசம்பர் 25ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்