பீகார் முதலமைச்சர் நிதிஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் வாக்களிப்பு

பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ், மத்திய அமைச்சர் ரவிசங்கர் வாக்களிப்பு
x
பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுஷில் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், நாடாளுமன்ற தேர்தல்  நீண்ட நாட்களாக நடைபெற்று வருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். ஓவ்வொரு கட்ட வாக்குப்பதிவுக்கும் நீண்ட கால அவகாசம் உள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் நிதிஷ் குறிப்பிட்டார். இதனிடையே, பாஜகவுக்கு வெற்றியளிக்க வாக்காளர்கள் தயாராகிவிட்டதாக மத்திய அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் கூறினார். பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சியும் பாட்னாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.


Next Story

மேலும் செய்திகள்