நாளை 17-வது மக்களவை இறுதிக் கட்ட தேர்தல்...

17- வது மக்களவை தேர்தல் 6 கட்டமாக 484 தொகுதிகளில் நடந்து முடிந்து உள்ள நிலையில், நாளை 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
நாளை 17-வது மக்களவை இறுதிக் கட்ட தேர்தல்...
x
17- வது மக்களவை தேர்தல் 6 கட்டமாக 484 தொகுதிகளில் நடந்து முடிந்து உள்ள நிலையில், நாளை 7-வது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் 8 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தில் 3, மத்தியப்பிரதேசத்தில் 8 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், மேற்கு வ​ங்கத்தில் 9 மற்றும் சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ஒருதொகுதிக்கும் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. 

மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேச​த்தில் உள்ள நான்கு தொகுதிகள் உள்பட 59 தொகுதிகளில் போட்டியிடும் 918 வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நாளைய வாக்குப்பதிவு மூலம் தெரிய வரும். இறுதிக்கட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் களத்தில் உள்ளார். வாக்கு பதிவையொட்டி, விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 7 கட்டத்திலும் பதிவான வாக்குகள் வரும் 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்