"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை" - தேர்தல் ஆணையம்

"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறவில்லை" என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை - தேர்தல் ஆணையம்
x
"தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் நரேந்திர மோடி மீறவில்லை" என்று, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில பொதுக் கூட்டத்தில் பிரதமர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக காங்கிரஸ் புகார் அளித்தது. இந்நிலையில், டில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், 'பிரதமர் மோடிக்கு எதிரான புகாரை மக்கள் பிரதிநித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளின் கீழும் ஆய்வு செய்ததாகவும், மகாராஷ்டிர தலைமை தேர்தல் அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையையும் ஆய்வு செய்த நிலையில், 'தேர்தல் நடத்தை நெறிமுறைகளை பிரதமர் மீறவில்லை' என்பது தெரியவந்தது என்றும், கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்