வேட்புமனு தாக்கலின் போது தகராறு : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கடந்த 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது தகராறு : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்
x
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, கடந்த 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். ஜோதிமணியுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சென்றனர். அப்போது ஒதுக்கப்பட்ட நேரத்தில் மனு வழங்க ஆட்சியர் அனுமதி மறுத்ததால் செந்தில் பாலாஜி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.  இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாந்தோணிமலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்