"நான் சவால்களுக்கே சவால் விடுபவன்" - பிரதமர் மோடி பேச்சு

எத்தகைய கடினமான பணியாக இருந்தாலும் தானே கையில் எடுத்துக்கொண்டு முழு மூச்சுடன் முடிக்க கூடியவன், சவால்களுக்கே சவால் விடுபவன் நான் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நான் சவால்களுக்கே சவால் விடுபவன் - பிரதமர் மோடி பேச்சு
x
எத்தகைய கடினமான பணியாக இருந்தாலும் தானே கையில் எடுத்துக்கொண்டு முழு மூச்சுடன் முடிக்க கூடியவன், சவால்களுக்கே சவால் விடுபவன் நான் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். அருணாச்சல பிரதேசம் பாசிகாட்டில் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்து விட்டதாக சொல்ல முடியாவிட்டாலும், தான் விடுமுறை எடுத்தேன் என்றோ, கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கினேன் என்றோ கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியினரை போல அவர்களின் தேர்தல் அறிக்கையும் மோசடியானது, நேர்மைக்கு புறம்பானது என்றும் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்