தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று சென்ற ஆசிரியர் பலி - ரூ.15 லட்சம் நிதியுதவி

Update: 2024-04-25 03:19 GMT

தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று சென்ற ஆசிரியர் பலி - ரூ.15 லட்சம் நிதியுதவி - மாவட்ட ஆட்சியர் நேரில் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இருக்கர வாகனத்தில் சென்ற அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் ஜெயபாலன் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் தேர்தல் பணியின் போது இறப்பு ஏற்பட்டதால் தேர்தல் ஆணையம் சார்பில் 15லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகையை நல்லாசிரியர் விருது பெற்ற ஜெயபாலனின் குடும்பத்தாரிடம் மாவட்ட தேர்தல் ஆணையரும் ஆட்சியருமான உமா நேரில் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்