கரூரில் செந்தில்பாலாஜி பெயரை சொன்ன கனிமொழி... பறந்த விசில்..சைலெண்டாக ஜோதிமணி கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2024-03-28 11:01 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு, உடல்நிலை சரியில்லாத போதும் ஜாமின் தராமல் வதைப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஜாமினே தராமல் செந்தில்பாலாஜியை சிறையில் வைத்து வதைக்கிறார்கள் என்று கூறினார். தொடர்ந்து பேசிய கனிமொழி, மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதால், அடிக்கடி ஜோதிமணி சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்