திடீரென வானை சூழ்ந்த கரும்புகை... மளமளவென பற்றியெரிந்த பிஸ்கட் கம்பெனி - போராடிய தீயணைப்புத் துறை

Update: 2024-03-28 11:25 GMT

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ரங்காரெட்டி மாவட்டம் அருகே உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல பிஸ்கட் கம்பெனியில் திடீர் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தீப்பற்றத் துவங்கியதும் எச்சரிக்கை மணி ஒலித்ததால் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர்... அப்பகுதி முழுமையையும் அடர் புகை மூட்டம் சூழ்ந்தது... நல் வாய்ப்பாக உயிர் சேதம் இல்லாத நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்