நீங்கியது தடை... மத்திய அரசு திடீர் அனுமதி... உற்சாகத்தில் விவசாயிகள்

Update: 2024-04-27 11:37 GMT

வங்கதேசம் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஆண்டை விட 2023-24 ஆம் ஆண்டில் கரீஃப் மற்றும் ராபி பயிர்கள் குறைவாக இருப்பதாலும், சர்வதேச சந்தையில் தேவையை அதிகரிப்பதற்காகவும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99 ஆயிரத்து 150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஏற்றுமதி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட இந்த ஒதுக்கீட்டு அளவு இலக்கு, நாட்டின் கோரிக்கையின்படி வழங்கப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் ஏற்றுமதி சந்தைகளுக்காக, 2 ஆயிரம் மெட்ரிக் டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்