"உலகையே பிரமிக்க வைத்த இந்தியாவின் தொழில்நுட்பம்" - பிரதமர் பெருமிதம்

Update: 2024-03-20 14:37 GMT

ஊரகம் மற்றும் நகர்ப்புறத்திற்கான இடைவெளியை நிரப்ப UPI தொழில்நுட்பம் இந்தியாவிற்கு பெரிதும் உதவியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் புத்தாக்க நிறுவனங்களுக்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். புத்தாக்க நிறுவனங்களின் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி, புத்தாக்க நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கடந்த பல தசாப்தங்களாக மென்பொருள் மற்றும் ஐடி துறையில் அளப்பரிய முன்னேற்றங்களை அடைந்திருப்பதாகக் கூறினார். இந்தியாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்ற போது நமது யு பி ஐ தொழில்நுட்பத்தை பார்த்து பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களின் பிரமித்து போனதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்