தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை - புதுவை அரசு அதிரடி

Update: 2024-05-10 08:49 GMT

தனியார் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைத்திட வேண்டும் என்றும், துவக்க நிலையில் என்.சி.இ.ஆர்.டி அல்லது மாநில பாடத்திட்டமாக எஸ்.சி.இ.ஆர்.டி பரிந்துரைத்த புத்தகங்கள் மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் எனவும், புதுச்சேரி அரசு பரிந்துரைத்த புத்தகங்களை எடுத்துச் செல்வதற்காக எந்த ஒரு பள்ளியிலும் எந்த ஒரு குழந்தைக்கும் பாகுபாடு காட்டக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... இதனால் மனம் அல்லது உடல் ரீதியான துன்பம் ஏற்படும்படி செய்தால் சிறார் நீதி சட்ட விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்