"வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி"...அதிமுக ஒன்றிய செயலாளர் மீது போலீசில் புகார்

Update: 2023-01-30 02:54 GMT

விழுப்புரம் அருகே வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதால் பணத்தை திருப்பி கேட்டவரை அதிமுக நிர்வாகி தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அதிமுக ஒன்றிய செயலாளராக உள்ள பேட்டை முருகன் என்பவரிடம் நல்லரசன் பேட்டை பகுதியை சேர்ந்த உதயசூரியன் என்பவர் சத்துணவு வேலை வாங்கி தர கோரி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுகிறது.

6 ஆண்டுகள் வாங்கியும் வேலை வாங்கி தராததால் உதயசூரியன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த பேட்டை முருகன் அடியாட்களுடன் சென்று உதயசூரியன் வீடுபுகுந்து அவரது குடும்பத்தினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த உதயசூரியன், அவரது மகன் சதீஷ்குமார் உள்ளிட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்