கைது செய்ய சென்ற SI-யின் கையை கடித்து குதறிய நபர் | Tiruppur

Update: 2022-11-27 06:58 GMT

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, கைது செய்ய வந்த காவல் உதவியாளர் கையை கடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த பாபா பஹ்ரூதீன் - நவ்பியா பர்வின் தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே, நவ்பியா பர்வின் பணியாற்றி வந்த தனியார் பனியன் நிறுவனத்திற்கு சென்ற பாபா பஹ்ரூதீன், அதன் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், கைது செய்ய சென்ற போலீசாரின் கையை பாபா பஹ்ரூதீன் கடித்துள்ளார். காயமடைந்த உதவி ஆய்வாளருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்