சோளிபாளையம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் கோபாலன், தனது நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆங்காங்கே மிளகாய் பொடி தூவப்பட்டிருப்பதையும் கவனித்த கோபாலன் போலீசாருக்கு தகவல் அளித்தார். அங்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர். சிசிடிவி கேமரா உதவியுடன் கொலைக்கார கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.