கம்யூனிஸ்ட் கட்சியினர்..ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு - சமூக வலைதளத்தில் வைரல்

Update: 2023-01-27 14:44 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள மார்கெட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிதி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் நிதி கேட்கும் போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் பகுதி பெரும் பரபரப்பான நிலையில், சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்