லண்டனில் பள்ளி ஆசிரியை படுகொலை - போலீசார் தீவிர விசாரணை

லண்டனில் பள்ளி ஆசிரியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

Update: 2021-09-25 07:40 GMT
நெசா என்ற 28 வயது ஆசிரியை கடந்த 17ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடுத்த நாள் பிற்பகலில் அருகில் இருந்த பூங்கா ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து ஆசிரியை நெசாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், பலரும் அதற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்தும் கொலையாளி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்