பாகிஸ்தானில் தஞ்சமடைந்த ஆப்கன் அகதிகள்- மீண்டும் ஆப்கன் அனுப்பிவைப்பு

பாகிஸ்தானில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ஆப்கன் அகதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2021-09-09 03:50 GMT
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அங்குள்ள மக்கள், அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர். பாகிஸ்தானின் சமான் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆப்கன் அகதிகள், கூடாரம் அமைத்து தற்காலிகமாக வசித்து வந்தனர். இந்நிலையில், சமான் பகுதியில் இருந்த 270 ஆப்கன் அகதிகளை மீண்டும் அவர்களது சொந்த நாட்டிற்கே அனுப்பி உள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்