அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி வன்முறை

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

Update: 2021-04-19 05:23 GMT
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் இருவர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிய வரவில்லை. இதற்கிடையே தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 பயங்கர துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்