இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா : "அதிக பரவும் தன்மை கொண்டது" - உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றின் மாறுபட்ட வடிவம் இங்கிலாந்தில் பரவி வருவது உறுதியாகி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த புதிய வகை வைரஸ், செப்டம்பர் மாதத்தில் இருந்து பரவி வருவது, கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. மேலும், புதிய வகை கொரோனா வைரஸ், 40 முதல் 70 சதவிகிதம் வரை அதிக பரவும் தன்மையை கொண்டு இருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.