நீண்ட இடைவெளிக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி - விமான நிலையங்களில் படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2020-12-01 09:51 GMT
ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த 8 மாதங்களாக கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் உள்ளூர் போக்குவரத்து மற்றும் விமான சேவை தொடங்க அங்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட நகரங்களில் சிக்கி இருந்த மக்கள் தங்கள் உறவினர்களை காண படையெடுத்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்