கொரோனா பரவல் அச்சம் - சினி வேர்ல்ட் நிறுவனம் மூடப்போவதாக அறிவிப்பு
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இடங்களில் அதிகளவு திரையரங்குகளை சினிவர்ல்ட் நிறுவனம் கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இடங்களில் அதிகளவு திரையரங்குகளை சினிவர்ல்ட் நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப் போவதாக அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால்,திரையரங்குகள் மூடப்பட்டு, படப்பிடிப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இதனால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதிலிருந்து மீளவே, தங்களது நிறுவனத்தை மூடப்போவதாக, சினிவர்ல்ட் கூறியுள்ளது. இதனால், 45 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.