இலங்கை : மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக வீடுகள்

இந்திய அரசின் நிதி உதவியோடு, இலங்கையில், வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2020-02-17 21:28 GMT
இந்திய அரசின் நிதி உதவியோடு, இலங்கையில், வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காக 10 ஆயிரம் தனி வீடு கட்டித்தரப்படும் என ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அட்டன் வெளிஓயா எனும் தோட்டத்தில், 50 குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்