இறந்த மகளுடன் வி.ஆர் தொழில்நுட்பத்தால் உரையாடிய தாய் - இணையத்தில் பரவும் தாய் - மகள் பாச போராட்டம்

இறந்துபோன தனது மகளுடன் அவரது தாய் தென் கொரியாவில் நவீன தொழில்நுட்பம் மூலம் உரையாடிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-02-15 02:05 GMT
இறந்துபோன தனது மகளுடன் அவரது தாய் தென் கொரியாவில் நவீன தொழில்நுட்பம் மூலம் உரையாடிய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், ஜாங் ஜி சங் என்ற பெண், பிரத்யேக 'ஹெட்செட் கையுறை அணிந்து, விர்சுவல் ரியாலிட்டி உலகத்திற்குள் நுழைந்தார். அப்போது 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த அவரது மகள் நயோன், நிஜத்தில் இருப்பது போலவே, அவர் கண்முன் தோன்றி, தாயாருடன் உரையாடினார்.  தாய், மகளுக்கு இடையிலான இந்த செயற்கை பாசப்போராட்டம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்