சூடான் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்

சூடான் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-04 20:49 GMT
சூடான் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு, பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில்,இந்த விபத்தில் இந்தியர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும், சில இந்தியர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தங்கள் சொந்தங்களை இழந்து துயரம் அடைந்துள்ள குடும்பத்தினருக்காக தாம் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும், தூதரகம் மூலம் செய்யப்பட்டு வருவதாகவும், டுவிட்டர் பதிவில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
\
Tags:    

மேலும் செய்திகள்