"உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவ வேண்டும்" - 13 வயது மகன் அரசுக்கு கோரிக்கை

Update: 2024-04-28 03:00 GMT

வெளிநாட்டில் உயிரிழந்த தந்தையின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என 13 வயது சிறுவன் அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள காக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து-சமயவள்ளி தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார். மணிமுத்து, 2018-ம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 30-ம் தேதி மின்சாரம் தாக்கி மணிமுத்து உயிரிழந்துள்ளார். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மணிமுத்துவின் 13 வயது மகன் கண்ணீர் மல்க, மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்