JEE நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர் - மன உளைச்சலில் செய்த செயல்

Update: 2024-04-28 03:03 GMT

சென்னை, தாம்பரம் அருகே ஜே.இ.இ நுழைவுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால், 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோலையூர் அடுத்த திருவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் இவான் ஜோஸ்வா. சோலையூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், பொதுத்தேர்வுடன் சேர்ந்து ஜே.இ.இ நுழைவுத் தேர்வும் எழுதி இருக்கிறார். இதில், ஜே.இ.இ தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாகவும், இதனால் மாணவர் மன உளைச்சலில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மாணவரின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்